இந்த விபத்து இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வத்தளை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, மட்டக்குளி கந்தஉட பகுதியில் வைத்து மூன்று முச்சக்கர வண்டிகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









