மீசாலை வடக்கு – புத்தூர் வீதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறை விசேட அதிரடிப்படையினர், குறித்த வீதியால் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி டயர்கள் சேதமடைந்ததால் வாகனங்களை மேற்கொண்டு செலுத்த முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து சாரதிகள் வாகனங்களை விட்டு இறங்கித் தப்பியோட முயன்ற வேளையில், அதிரடிப்படையினர் அவர்களைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சாரதிகளும், சட்டவிரோத மணலுடன் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொடிகாமம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.




