2001 செப்டெம்பர் 11 அன்று, நியூயோர்க்கில் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் வொஷிங்டனில் பென்டகன் மீதான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையுடன் (2026 செப்டெம்பர் 11) சரியாக கால் நூற்றாண்டு கடந்து விட்டது. அன்றைய தினம் வானளாவ உயர்ந்து சென்ற புகைமண்டலம் உலக அரசியல் வரைபடத்தை நிரந்தரமாகவே மாற்றியமைத்துவிட்டது. அதற்குப் பிறகு முன்னரைப் போன்று இனிமேல் எதுவும் இருக்காது என்றாகியது.
அமெரிக்காவின் ' பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்' என்ற பிரகடனம் வெறுமனே இராணுவ நடவடிக்கையாக மாத்திரமல்ல, இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான சர்வதேச சட்டங்கள், நாடுகளின் சுயாதிபத்தியக் கோட்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் மீதான உலகளாவிய பார்வையை அடியோடு மாற்றியமைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியாகவும் அது அமைந்தது. 'பாதுகாப்பு' என்ற ஒற்றைக் காரணி, ஜனநாயகத்தையும் தனிமனித சுதந்திரத்தையும் விட மேலோங்கிய காலப் பகுதியாக இந்த 25 வருடங்களும் அமைந்தன.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்காவினதும் அதன் மேற்குலக நேசநாடுகளினதும் படையெடுப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர், தேசங்களின் சுயாதிபத்தியத்துக்கு சர்வதேச சமூகம் அளித்துவந்த மதிப்பை தலைகீழாக மாற்றியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர், போர்க்கள எல்லைகளைத் தாண்டி உலகின் குடிமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள்ளும் ஊடுருவியது. அமெரிக்காவின் ' தேசபக்த சட்டம்' (Patriot Act) தொடங்கி உலக நாடுகள் முழுவதும் இயற்றப்பட்ட கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் அரசின் கண்காணிப்பு அதிகாரங்களை எல்லையற்றதாக்கின. பாதுகாப்புக்காக சுதந்திரத்தைத் தியாகம் செய்வது என்ற ஆபத்தான போக்கு உலகளாவிய வழக்கமாக மாறியது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் போலித்தனம் உலகிற்கு அம்பலமானது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், ஜெனிவா உடன்படிக்கைகள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பாதுகாப்புகள் ' தேசிய பாதுகாப்பு ' என்ற போர்வையில் திட்டமிட்டு மீறப்பட்டன. நாளடைவில் இது உலகளவில் சர்வாதிகார ஆட்சிகள் அவற்றின் சொந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நியாயப்படுத்த தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. இலங்கைகையர்களாகிய நாம் இதை தாராளமாக அனுபவித்தோம்.
பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் பயங்கரவாத அமைப்புகளுக்கு (முக்கியமாக அல் - கொய்தாவுக்கு) எதிரானதாக தொடங்கப்பட்ட போதிலும், இறுதியில் அமெரிக்காவின் நலன்களுக்கும் அதன் உலகப் பார்வைக்கும் ஏற்ற முறையில் ஆப்கானிஸ்தான், மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்காவில் ' ஜனநாயகத்தைப் பரப்புவது' என்ற போர்வையில் ஆட்சிகளை மாற்றுவதற்கான போராகவும் மாறியது.
ஆட்சி மாற்றப் போர்கள் ஈராக்கில் தொடங்கி, 2011 ஆம் ஆண்டில் 'அரபு வசந்தப் ' போராட்டங்களுக்கு மத்தியில் லிபிய மக்களைப் 'பாதுகாக்கும்' போர்வையில் கேணல் கடாபியின் படைகளுக்கு எதிராக குண்டுவீச்சாக மாறின. அதை பின்னிருந்து வழிநடத்தியதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பகிரங்கமாகவே கூறினார்.
கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த போரின் விளைவாக ஆபிரிக்காவின் மிகவும் நிலையுறுதியான நாடுகளில் ஒன்றாக விளங்கிய லிபியா சீர்குலைந்தது. லிபிய அரசின் வீழ்ச்சி பயங்கரவாதத்துக்கான கதவுகளை ஆபிரிக்கா முழுவதும் திறந்தது. ஆயுதங்கள் எல்லைகளைத் தாண்டிக் கடத்தப்பட்டு பல்வேறு போராளிக் குழுக்களினதும் பயங்கரவாதக் குழுக்களினதும் கைகளுக்குச் சென்றன. கடந்த 15 வருடங்களுக்கும் அதிகமான காலமாக வட ஆபிரிக்காவின் பல நாடுகளில் ஜிஹாதிக் குழுக்கள் அவற்றின் செல்வாக்கைப் பரப்பவருகின்றன.
9/11 தாக்குதல்களுக்கு பின்னரான இருபத்தைந்து வருடங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தின் பலவீனத்தையும் எல்லைகளையும் வெளிக் காட்டியிருக்கிறது. இரு தசாப்தகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளின் பின்வாங்கல் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மூலோபாயத் தோல்வியை கோடிட்டுக் காட்டியது.
இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா இந்தப் போர்களில் அதன் கவனத்தையும் வளங்களையும் குவித்திருந்த வேளையில், சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் சர்வதேச அரங்கில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றன. இதன் விளைவாக, 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு நிலவிய அமெரிக்க ஒற்றை ஆதிக்கம் மறைந்து புதிய ஒரு பல்துருவ ஒழுங்கு உருவாகியிருக்கிறது.

சர்வதேச உடன்படிக்கைகள், காலநிலை உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட வர்த்தகப் போர்களையும் அச்சுறுத்தல்களையும் அவர் முதன்மைப்படுத்துவதால் உலகில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்று அவர் பகிரங்கமாகவே கூறுகிறார்.
உலகளாவிய இராஜதந்திர நெருக்கடிகளை ட்ரம்ப் கையாளுகின்ற விதத்தில் வெளிப்படுகின்ற அடாவடித்தனமான அணுகுமுறை, சர்வதேச உறுதிப்பாடின்மையை மேலும் சீர்குலைத்தது. 9/11 தாக்குதல்களுக்குப் பின்னரான ஆக்கிரமிப்புகள், இராணுவக் குவிப்புகள் மற்றும் தன்னிச்சையான. வெளியுறவுக் கொள்கையும் இருபத்தைந்து வருடங்களின் முடிவில் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தின் எல்லையை அம்பலப்படுத்தியிருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை 'தி இந்து' பத்திரிகையின் சர்வதேச விவகார ஆசிரியர் ஸ்ரான்லி ஜோனி, 'ஒரு முனை உலகத்துக்குப் பிறகு தன்னிச்சையாகச் செயற்படும் அமெரிக்கா' (A unilateral America in a post - unipolar world) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் 9/11 தாக்குதல்களுக்கு முன்னர் இருந்த அமெரிக்காவுக்கும் இருபத்தைந்து வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மிகவும் சுருக்கமாக விளக்கியிருந்தார். அந்த பந்திகளின் தமிழ் மொழியாக்கத்தை இங்கு மீள்பிரசுரம் செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
"2021 செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது அமெரிக்கா தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தது. அதன் பனிப்போர் எதிரியான சோவியத் யூனியன் ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் சிதைந்துபோயிருந்தது. ரஷ்யா, சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரான குழப்பங்களில் இருந்து மீள்வதற்கு போராடிக் கொண்டிருந்தது. அதேவேளை, சீனா, அமெரிக்காவின் நெருக்கிய பொருளாதாரப் பங்காளியாக இருந்தது.
"கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா வெற்றிகரமாக இராணுவத் தலையீடுகளை மேற்கொண்டது. வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) ரஷ்யாவின் அயல் நாடுகளில் அதன் முதற்கட்ட விரிவாக்கத்தை நிறைவு செய்திருந்தது. அமெரிக்கா மேற்காசியாவிலும் பலம் மிக்க இராணுவப் பிரசன்னத்தைக் கொண்டிருந்தது.
"9/111 தாக்குதல்களுக்கு 25 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாத குழுக்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தப்பிப் பிழைத்தது மாத்திரமல்லாமல், பல புவியியல் பகுதிகளை உள்ளடக்கிய எல்லை கடந்த ஜிஹாத் திட்டத்தின் கீழ் உள்நாட்டுப் பிரிவுகளாகவும் உருவாகியுள்ளன. நேட்டோ மூலம் ஐரோப்பாவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு இருந்த போதிலும், அத்திலாந்திக் நாடுகளுக்கு இடையிலான கூட்டணியில் பிளவு விரிவடைந்து வருகிறது. அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகள், .ெவாஷிங்டனின் புதிய கொடுக்கல் வாங்கல் தன்மையான போக்கினால் அதிருப்தி அடைந்து வருகினறனர்.
"மேற்காசியாவில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல், வொஷிங்டனை மேலும் ஆழமான ஒரு பிராந்தியச் சுழிக்குள் இழுத்துச் செல்கிறது. அமெரிக்கா, மேற்காசியாவில் முடங்கிக் கிடக்கும் வேளையில், சீனா பெருகிவரும் பல்துருவ ஒழுங்கின் இரண்டாவது தூணாக உருவெடுத்திருக்கிறது.
அதே நேரத்தில், ரஷ்யா, ஐரோப்பாவில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புக் கட்டமைப்புக்கு தீவிரமான சவாலை ஏற்படுத்துகிறது.
"சிந்தனையற்ற ஈரான் போர் உணர்த்துவது போன்று அமெரிக்கா தொடர்ந்து ஒரு பக்கச் சார்புடைய ஆதிக்க சக்தியாகவே செயற்படுகிறது. ஆனால், அதன் தன்னிச்சையான செயற்பாடுகள் ஒரு துருவத்துக்கு பின்னரான உலகில் வளர்ந்துவரும் யதார்த்தங்களுடன் நாளுக்கு நாள் முரண்பட்டே வருகிறது."
இறுதியாக, 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பயங்கரவாத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனப்படுத்திய
போது கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மிகவும் தீர்க்க தரிசனமான கருத்தொன்றைக் கூறினார்.
"பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான பிரிகோட்டை அழித்து விடப் போகிறார்கள்."
வீரகத்தி தனபாலசிங்கம்
அமெரிக்காவின் ' பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்' என்ற பிரகடனம் வெறுமனே இராணுவ நடவடிக்கையாக மாத்திரமல்ல, இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான சர்வதேச சட்டங்கள், நாடுகளின் சுயாதிபத்தியக் கோட்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் மீதான உலகளாவிய பார்வையை அடியோடு மாற்றியமைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியாகவும் அது அமைந்தது. 'பாதுகாப்பு' என்ற ஒற்றைக் காரணி, ஜனநாயகத்தையும் தனிமனித சுதந்திரத்தையும் விட மேலோங்கிய காலப் பகுதியாக இந்த 25 வருடங்களும் அமைந்தன.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்காவினதும் அதன் மேற்குலக நேசநாடுகளினதும் படையெடுப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர், தேசங்களின் சுயாதிபத்தியத்துக்கு சர்வதேச சமூகம் அளித்துவந்த மதிப்பை தலைகீழாக மாற்றியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர், போர்க்கள எல்லைகளைத் தாண்டி உலகின் குடிமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள்ளும் ஊடுருவியது. அமெரிக்காவின் ' தேசபக்த சட்டம்' (Patriot Act) தொடங்கி உலக நாடுகள் முழுவதும் இயற்றப்பட்ட கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் அரசின் கண்காணிப்பு அதிகாரங்களை எல்லையற்றதாக்கின. பாதுகாப்புக்காக சுதந்திரத்தைத் தியாகம் செய்வது என்ற ஆபத்தான போக்கு உலகளாவிய வழக்கமாக மாறியது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் போலித்தனம் உலகிற்கு அம்பலமானது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், ஜெனிவா உடன்படிக்கைகள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பாதுகாப்புகள் ' தேசிய பாதுகாப்பு ' என்ற போர்வையில் திட்டமிட்டு மீறப்பட்டன. நாளடைவில் இது உலகளவில் சர்வாதிகார ஆட்சிகள் அவற்றின் சொந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நியாயப்படுத்த தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. இலங்கைகையர்களாகிய நாம் இதை தாராளமாக அனுபவித்தோம்.
பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் பயங்கரவாத அமைப்புகளுக்கு (முக்கியமாக அல் - கொய்தாவுக்கு) எதிரானதாக தொடங்கப்பட்ட போதிலும், இறுதியில் அமெரிக்காவின் நலன்களுக்கும் அதன் உலகப் பார்வைக்கும் ஏற்ற முறையில் ஆப்கானிஸ்தான், மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்காவில் ' ஜனநாயகத்தைப் பரப்புவது' என்ற போர்வையில் ஆட்சிகளை மாற்றுவதற்கான போராகவும் மாறியது.
ஆட்சி மாற்றப் போர்கள் ஈராக்கில் தொடங்கி, 2011 ஆம் ஆண்டில் 'அரபு வசந்தப் ' போராட்டங்களுக்கு மத்தியில் லிபிய மக்களைப் 'பாதுகாக்கும்' போர்வையில் கேணல் கடாபியின் படைகளுக்கு எதிராக குண்டுவீச்சாக மாறின. அதை பின்னிருந்து வழிநடத்தியதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பகிரங்கமாகவே கூறினார்.
கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த போரின் விளைவாக ஆபிரிக்காவின் மிகவும் நிலையுறுதியான நாடுகளில் ஒன்றாக விளங்கிய லிபியா சீர்குலைந்தது. லிபிய அரசின் வீழ்ச்சி பயங்கரவாதத்துக்கான கதவுகளை ஆபிரிக்கா முழுவதும் திறந்தது. ஆயுதங்கள் எல்லைகளைத் தாண்டிக் கடத்தப்பட்டு பல்வேறு போராளிக் குழுக்களினதும் பயங்கரவாதக் குழுக்களினதும் கைகளுக்குச் சென்றன. கடந்த 15 வருடங்களுக்கும் அதிகமான காலமாக வட ஆபிரிக்காவின் பல நாடுகளில் ஜிஹாதிக் குழுக்கள் அவற்றின் செல்வாக்கைப் பரப்பவருகின்றன.
9/11 தாக்குதல்களுக்கு பின்னரான இருபத்தைந்து வருடங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தின் பலவீனத்தையும் எல்லைகளையும் வெளிக் காட்டியிருக்கிறது. இரு தசாப்தகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளின் பின்வாங்கல் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மூலோபாயத் தோல்வியை கோடிட்டுக் காட்டியது.
இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா இந்தப் போர்களில் அதன் கவனத்தையும் வளங்களையும் குவித்திருந்த வேளையில், சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் சர்வதேச அரங்கில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றன. இதன் விளைவாக, 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு நிலவிய அமெரிக்க ஒற்றை ஆதிக்கம் மறைந்து புதிய ஒரு பல்துருவ ஒழுங்கு உருவாகியிருக்கிறது.

சர்வதேச உடன்படிக்கைகள், காலநிலை உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட வர்த்தகப் போர்களையும் அச்சுறுத்தல்களையும் அவர் முதன்மைப்படுத்துவதால் உலகில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்று அவர் பகிரங்கமாகவே கூறுகிறார்.
உலகளாவிய இராஜதந்திர நெருக்கடிகளை ட்ரம்ப் கையாளுகின்ற விதத்தில் வெளிப்படுகின்ற அடாவடித்தனமான அணுகுமுறை, சர்வதேச உறுதிப்பாடின்மையை மேலும் சீர்குலைத்தது. 9/11 தாக்குதல்களுக்குப் பின்னரான ஆக்கிரமிப்புகள், இராணுவக் குவிப்புகள் மற்றும் தன்னிச்சையான. வெளியுறவுக் கொள்கையும் இருபத்தைந்து வருடங்களின் முடிவில் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தின் எல்லையை அம்பலப்படுத்தியிருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை 'தி இந்து' பத்திரிகையின் சர்வதேச விவகார ஆசிரியர் ஸ்ரான்லி ஜோனி, 'ஒரு முனை உலகத்துக்குப் பிறகு தன்னிச்சையாகச் செயற்படும் அமெரிக்கா' (A unilateral America in a post - unipolar world) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் 9/11 தாக்குதல்களுக்கு முன்னர் இருந்த அமெரிக்காவுக்கும் இருபத்தைந்து வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மிகவும் சுருக்கமாக விளக்கியிருந்தார். அந்த பந்திகளின் தமிழ் மொழியாக்கத்தை இங்கு மீள்பிரசுரம் செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
"2021 செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது அமெரிக்கா தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தது. அதன் பனிப்போர் எதிரியான சோவியத் யூனியன் ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் சிதைந்துபோயிருந்தது. ரஷ்யா, சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரான குழப்பங்களில் இருந்து மீள்வதற்கு போராடிக் கொண்டிருந்தது. அதேவேளை, சீனா, அமெரிக்காவின் நெருக்கிய பொருளாதாரப் பங்காளியாக இருந்தது.
"கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா வெற்றிகரமாக இராணுவத் தலையீடுகளை மேற்கொண்டது. வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) ரஷ்யாவின் அயல் நாடுகளில் அதன் முதற்கட்ட விரிவாக்கத்தை நிறைவு செய்திருந்தது. அமெரிக்கா மேற்காசியாவிலும் பலம் மிக்க இராணுவப் பிரசன்னத்தைக் கொண்டிருந்தது.
"9/111 தாக்குதல்களுக்கு 25 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாத குழுக்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தப்பிப் பிழைத்தது மாத்திரமல்லாமல், பல புவியியல் பகுதிகளை உள்ளடக்கிய எல்லை கடந்த ஜிஹாத் திட்டத்தின் கீழ் உள்நாட்டுப் பிரிவுகளாகவும் உருவாகியுள்ளன. நேட்டோ மூலம் ஐரோப்பாவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு இருந்த போதிலும், அத்திலாந்திக் நாடுகளுக்கு இடையிலான கூட்டணியில் பிளவு விரிவடைந்து வருகிறது. அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகள், .ெவாஷிங்டனின் புதிய கொடுக்கல் வாங்கல் தன்மையான போக்கினால் அதிருப்தி அடைந்து வருகினறனர்.
"மேற்காசியாவில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல், வொஷிங்டனை மேலும் ஆழமான ஒரு பிராந்தியச் சுழிக்குள் இழுத்துச் செல்கிறது. அமெரிக்கா, மேற்காசியாவில் முடங்கிக் கிடக்கும் வேளையில், சீனா பெருகிவரும் பல்துருவ ஒழுங்கின் இரண்டாவது தூணாக உருவெடுத்திருக்கிறது.
அதே நேரத்தில், ரஷ்யா, ஐரோப்பாவில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புக் கட்டமைப்புக்கு தீவிரமான சவாலை ஏற்படுத்துகிறது.
"சிந்தனையற்ற ஈரான் போர் உணர்த்துவது போன்று அமெரிக்கா தொடர்ந்து ஒரு பக்கச் சார்புடைய ஆதிக்க சக்தியாகவே செயற்படுகிறது. ஆனால், அதன் தன்னிச்சையான செயற்பாடுகள் ஒரு துருவத்துக்கு பின்னரான உலகில் வளர்ந்துவரும் யதார்த்தங்களுடன் நாளுக்கு நாள் முரண்பட்டே வருகிறது."
இறுதியாக, 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பயங்கரவாத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனப்படுத்திய
போது கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மிகவும் தீர்க்க தரிசனமான கருத்தொன்றைக் கூறினார்.
"பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான பிரிகோட்டை அழித்து விடப் போகிறார்கள்."
வீரகத்தி தனபாலசிங்கம்




