சமீபத்திய பதிவுகள்
“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு : ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை!  •  மட்டக்குளி பகுதியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு; இருவர் காயம்  •  ஐரோப்பாவின் தங்க மீட்பு நடவடிக்கை; அமெரிக்கா மீதான நம்பிக்கைச் சரிவா?-  •  “மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொன்ற கணவன்” - உடந்தையாக இருந்த முன்னாள் காதலி.. நள்ளிரவில் நடந்தது என்ன?  •  முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

அர்த்­த­மற்ற போர்­களும் சிதையும் நம்­பிக்­கையும்: அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தங்­கத்தை இடம்மாற்றும் நெதர்­லாந்து

அர்த்­த­மற்ற போர்­களும் சிதையும் நம்­பிக்­கையும்: அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தங்­கத்தை இடம்மாற்றும் நெதர்­லாந்து
யுத்தம் பற்றி நாம் நிறையப் பேசு­கிறோம். வழக்­க­மாக யுத்­தத்தின் நேரடி விளை­வுகள் பற்­றியும், அதன் மூலம் நிகழும் உட­னடி இழப்­புகள் பற்­றியும் பேசு­வதே வழக்கம்.

எத்­தனை உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டன, எவ்­வ­ளவு சொத்­துக்கள் நாச­மா­கி­யி­ருக்­கின்­றன, பொரு­ளா­தாரம் எவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­கி­றது என்பன போன்ற கேள்­வி­க­ளுக்கு நாம் பதில் தேடு­கிறோம்.

ஆனால், போரின் பலிக்­க­டா­வாகும் இன்­னு­மொரு முக்­கி­ய­மான விட­யத்தின் மீது நாம் ஆழ­மான பார்­வையைச் செலுத்­து­வ­தில்லை. அது வேறொன்றும் அல்ல; 'நம்­பிக்கை' (Trust) என்­ப­தாகும்.

பலம்­பொ­ருந்­திய நாடுகள் ஒன்­றை­யொன்று எதிர்த்துப் போர் செய்­கின்­றன. அந்­நா­டுகள் தமது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி நலிந்த நாடு­களை அச்­சு­றுத்­து­கின்­றன. இந்த அரா­ஜக நடை­மு­றையில் சிதைந்­து­போ­வது, உலக வர்த்­த­கத்தைப் பின்னிப் பிணைத்து வைத்­தி­ருக்கும் மெல்­லிய நூலி­ழை­கள்தான்.

அந்த நூலி­ழைகள் யாவும் பரஸ்­பர நம்­பிக்­கையால் பிணைக்­கப்­பட்­டவை.

அந்த நம்­பிக்­கையை இழப்­பது எத்­த­கைய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை விவ­ரிக்கும் வணிக மாற்­ற­மொன்று தற்­போது உலக நிதி­யி­யலில் அமை­தி­யாக நிகழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது. இது அதிகம் கவ­னிக்­கப்­ப­டாத, ஆனால், மிகவும் சுவா­ரஸ்­ய­மான ஒரு நிகழ்­வாகும்.

ஐரோப்­பிய நாடு­களில் மிகவும் ஸ்திர­மான நாடு­களுள் ஒன்று நெதர்­லாந்து. அந்­நாடு, அமெ­ரிக்­காவின் பாது­காப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமக்குச் சொந்­த­மான பெரு­ம­ளவு தங்­கத்தை அங்­கி­ருந்து மெது­வாக இடம் மாற்றி வரு­கி­றது. பெரு­ம­ளவு என்றால், சுமார் 10 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான தங்கம்.

இதன் பின்­னா­லுள்ள அர­சி­யலைப் புரிந்­து­கொள்ள 'தங்கக் காப்பு நிதி' (Gold Reserves) பற்­றியும், உலக நாடுகள் அவற்றை ஏன் தம் சொந்த நாட்டை விட்டு வெளியே வேறு இடங்­களில் பேணிப் பாது­காக்­கின்­றன என்­ப­தையும் அறி­வது அவ­சி­ய­மாகும்.

தம்­மிடம் இருக்கும் தங்க நகை­க­ளையோ அல்­லது தங்க நாண­யங்­க­ளையோ வங்­கியின் பாது­காப்பு லொக்­கரில் பூட்டி வைத்துப் பரா­ம­ரிக்கும் ஒரு குடும்­பத்தைக் கற்­பனை செய்து கொள்­ளுங்கள்.

அந்தக் குடும்­பத்­தினர் தேவை­யில்­லாமல் வங்கி லொக்­கரின் மீது கை வைக்க மாட்­டார்கள். திடீர் மருத்­துவச் செலவு அல்­லது பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில் மட்­டுமே லொக்­க­ரி­லி­ருந்து தங்­கத்தை எடுப்­பார்கள். அது ஓர் அவ­ச­ர­காலச் சேமிப்பு.

இதைத்தான் உலக நாடு­களும் செய்­கின்­றன. ஒரு நாடு பயன்­ப­டுத்தும் காகித நாண­யத்தின் மதிப்பு வீழ்ச்­சி­ய­டையும் சந்­தர்ப்­பங்­களில், தங்கக் கையி­ருப்­புதான் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்குப் பாது­காப்­பாக அமை­கி­றது. நெதர்­லாந்­திடம் 84 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான 612 தொன் தங்கம் உள்­ளது.

"எல்லா முட்­டை­க­ளையும் ஒரே கூடையில் போட்டு வைக்கக் கூடாது" என்­பது நிதித்­துறைப் பழ­மொழி. ஆபத்­து­களைப் பிரிப்­ப­தற்­கா­கவே (Risk Diversification) உலக நாடுகள் தமது தங்­கத்தை நியூயோர்க், லண்டன், ஒட்­டாவா போன்ற சர்­வ­தேச வணிகத் தலை­ந­கர்­களில் பிரித்துச் சேமித்து வைக்­கின்­றன. இதில் நியூ­யோர்க்கின் 'பெடரல் ரிசர்வ்' வங்­கியே உல­க­ளவில் மிகவும் பாது­காப்­பா­னது என்ற நம்­பிக்கை நீண்­ட­கா­ல­மாக நிலவி வந்­தது. அப்­ப­டி­யாயின், நெதர்­லாந்து ஏன் 10 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான தங்­கத்தை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து திடீ­ரென வெளி­யேற்ற வேண்டும்?

இந்தக் கேள்­விக்­கான விடை, உல­க­ளா­விய ஆயுத மோதல்­களால் சங்­கிலித் தொட­ராக நிகழும் சம்­ப­வங்­களில் உள்­ளது.

கடந்த சில மாதங்­க­ளாக, உலகின் பூகோள அர­சி­யலில் நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன. அமெ­ரிக்கா, ஈரா­னுக்கு எதி­ராகப் போரில் ஈடு­பட்­டுள்­ளது; தென் அமெ­ரிக்க நாடு­களின் அர­சி­யலில் தலை­யீடு செய்­கி­றது; தனது அயல்­நா­டான கன­டாவின் மீது கடு­மை­யான இறக்­கு­மதித் தீர்­வை­களை விதித்துப் பகை­மையை அதி­க­ரித்­துள்­ளது.

இது தவிர, ஈரா­னுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கையில் இணைய மறுத்த ஐரோப்­பிய நாடு­களை அமெ­ரிக்கா பகி­ரங்­க­மாகக் கண்­டிக்­கி­றது; வர்த்­தகத் தடை­களை விதிப்­ப­தாக மிரட்­டு­கி­றது.

இன்­னொ­ரு­புறம், ரஷ்­ய-­உக்ரேன் போரின் போது, ரஷ்ய மத்­திய வங்­கியின் 300 பில்­லியன் டொலர் மதிப்­பி­லான சொத்­துக்­களை மேலைத்­தேய நாடுகள் முடக்­கின.

இது உலக நாடு­க­ளுக்கு ஒரு பெரிய எச்­ச­ரிக்கை மணியை அடித்­தது: "நாளை ஒரு வல்­ல­ரசு நாடு நம் மீது கோபப்­பட்டால், அந்­நாட்டுக் கஜா­னாவில் நாம் சேமித்து வைத்­துள்ள நம் சொந்தச் செல்­வத்­தையே அவர்கள் முடக்­கி­விடக் கூடும்; அத­னையே நமக்கு எதி­ரா­கவும் திருப்­பக்­கூடும்!"

அமெ­ரிக்­காவை கண்­மூ­டித்­த­ன­மாக நம்­பு­வது இனி ஆபத்­தா­னது என்­பதை உணர்ந்த நெதர்­லாந்து மத்­திய வங்கி, அங்­கி­ருக்கும் தங்­கத்தை லண்­ட­னுக்கும், அங்­கி­ருந்து தனது சொந்த நாட்­டுக்கும் அவ­ச­ர­மாக மாற்றத் தொடங்­கி­யது. நெதர்­லாந்து மட்­டு­மல்ல; பிரான்ஸ், ஜேர்­மனி போன்ற நாடு­களும் தம் தங்­கத்தைத் தாயகம் திருப்பும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளன.

அத்­தி­லாந்திக்  பெருங்­க­டலைக் கடந்து இவ்­வ­ளவு பெரிய அள­வி­லான தங்கக் கட்­டி­களை (Gold Bars) கப்­பல்­களில் கொண்டு வரு­வது எளி­தா­ன­தல்ல. அதில் பெரும் பாது­காப்பு அபா­யங்கள் உள்­ளன. எனவே, நெதர்­லாந்து மத்­திய வங்கி ஒரு புத்­தி­சா­துர்­ய­மான இரண்டு வழி­மு­றை­களைக் கையாண்­டது:

அதில் முத­லா­வது பௌதீக ரீதி­யான இட­மாற்றம். 27 தொன் எடை­யுள்ள உண்­மை­யான தங்கக் கட்­டி­களைப் பலத்த பாது­காப்­புடன் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நேர­டி­யாகத் தமது நாட்­டுக்குக் கப்­பல்கள் மற்றும் விமா­னங்கள் மூலம் கொண்டு வந்­தது.

அடுத்­தது, நிதிச் சந்தை மூலம் கைமாற்­றுதல். எஞ்­சிய பெருந்­தொகை தங்­கத்தை நியூயோர்க் சந்­தை­யி­லேயே விற்­று­விட்டு, அதே அள­வுக்குச் சம­மான தங்­கத்தை லண்டன் வங்­கியின் கஜா­னாவில் உட­ன­டி­யாக விலைக்கு வாங்­கி­யது. (நியூ­யோர்க்கில் 8.3 பில்­லியன் டொலர் மதிப்­பி­லான தங்கம் இவ்­வாறு கைமாற்­றப்­பட்­டது).

நிதி­யு­லகில் நிகழும் இந்தச் சது­ரங்கப் போட்­டி­யி­லி­ருந்து நாம் அறிந்­து­கொள்ள வேண்­டிய பாடம் மிக முக்­கி­ய­மா­னது.

துப்­பாக்­கிகள், ஏவு­க­ணைகள், போர் விமா­னங்­களால் மட்­டுமே யுத்தம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. காகித நாண­யங்கள், வர்த்­தக வரிகள், பொரு­ளா­தாரத் தடைகள் ஆகி­ய­வையும் இன்று போர் ஆயு­தங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பலம்­பொ­ருந்­திய நாடுகள் இராஜதந்திரத் தைத் தாண்டிச் சென்று ஆதிக்கம் செலுத்த

நினைக்கும் போது, உலகளாவிய நிதிச் சந் தைகள் குழப்பத்திற்குள் தள்ளப்படுகின்றன. நாடுகள் மத்தியிலான பரஸ்பர நம்பிக்கை காணாமல் போய்விடுகிறது.

தற்போதைய போர்ச் சூழலில், உலகின் மிகவும் பணக்கார, அமைதியான ஒரு தேசமே அச்சமடைந்து, தனது தங்கச் சேமிப்பைத் தன் கஜானாவிற்குள் அவசரமாகக் கொண்டுவர நினைக்கிறதென்றால், இந்த அர்த்தமற்ற போர்களில் உண்மையான வெற்றியாளர்கள் எவருமில்லை.

போர்கள், உலகைச் சந்தேகக் கண்ணோட் டம் கொண்டதாகவும், வர்த்தக ரீதியாகச் செலவுமிக்கதாகவும் மாற்றி, அவ்வழியில் நம் அனைவரின் எதிர்காலப் பாதுகாப்பையுமே கேள்விக்குறியாக்குகின்றன என்பதே கசப்பான யதார்த்தமாகும்.


சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை  
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்