சமீபத்திய பதிவுகள்
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் உண்மையில் என்ன?  •  நாமல்: மொட்டு கட்சியின் எதிர்காலம் (?)  •  தண்டனை விலக்கும் போர்க்குற்றச்சாட்டும்  •  ஈரான் போர் | உலகையே உலுக்கிய ரகசிய கூட்டணி.. அமெரிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!  •  ஹவுதிகள் கைப்பற்றிய 4 முக்கிய இடங்கள்.. எண்ணெய் ஏற்றுமதிக்கு சவால்.. அதிர்ச்சியில் சவூதி!

தண்டனை விலக்கும் போர்க்குற்றச்சாட்டும்

தண்டனை விலக்கும் போர்க்குற்றச்சாட்டும்
முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் சவேந்­திர சில்வா, அண்­மையில் இந்­திய காணொளி ஊட­க­மான ‘இம்பாக்ட் ஸ்டோரிஸ்’ இற்கு (Impact Stories) செவ்­வி­யொன்றை வழங்­கி­யி­ருக்­கிறார்.

கிட்­டத்­தட்ட ஒன்­றரை மணி­நேரக் காணொளிச் செவ்­வியில், அவர் தன் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­களை மறுத்­தி­ருக்­கிறார்.

தனக்கு எதி­ராக நியா­ய­மற்ற வகையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் தடை­களை விதித்­தி­ருப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, போரின் இறு­திக்­கட்­டத்தில் இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்கள் இலக்கு வைக்­கப்­ப­ட­வில்லை என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ஆனால், போரில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்­பதை அவர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

பொது­மக்கள் இலக்­கா­குவதை தவிர்க்கும் வகையில் தாக்­கு­தல்­களை நடத்­தப்­பட்­ட­தாக அவர் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இறு­திக்­கட்டப் போரில் பொது­மக்கள் எவரும் கொல்­லப்­ப­ட­வில்லை,  பொது­மக்­க­ளுக்கு  சேதங்கள் ஏற்­ப­டாத வகை­யி­லேயே போரை நடத்­தினோம் என மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் முன்னர் கூறி­யி­ருந்­தது.

ஆனால், ஐ.நா. நிபு­ணர்கள் குழுவின் அறிக்கை அதனை நிரா­க­ரித்­த­துடன், 40ஆயிரம் பொது­மக்கள் வரை கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என மதிப்­பீடு செய்­தி­ருந்­தது.

இதற்குப் பின்­னரே போரில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர் என்றும், சிக்­க­லான அந்தப் போரில் அது தவிர்க்க முடி­யா­தது என்றும் பாது­காப்பு அமைச்சு ஒப்­புக்­கொண்­டது.

அதே­வேளை, பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை, 'பொது­மக்­க­ளுக்கு உயி­ரி­ழப்­புகள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை' என்ற அர­சாங்­கத்தின் கூற்றை வெளிப்­ப­டை­யாக நிரா­க­ரித்­தது.

இரா­ணு­வத்தின் குண்­டு­வீச்­சுகள், சந்­தே­கத்­திற்கு இட­மின்றி கணி­ச­மான பொது­மக்­க­ளுக்கு உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தையும் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யது.

இப்­போது ஜெனரல் சவேந்­திர சில்வா, போரில் பொது­மக்­க­ளுக்கு உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்­கிறார், ஆனால், தாங்கள் பொது­மக்­களை விலக்­கியே தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும் கூறு­கிறார்.

அப்­ப­டி­யானால் பொது­மக்கள் எப்­படி ஆயி­ரக்­க­ணக்கில் கொல்­லப்­பட்­டார்கள்?

இரா­ணுவம், பொது­மக்­களை விலக்கி வைத்து நடத்­திய தாக்­கு­த­லி­லேயே இந்­த­ள­வுக்கு உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்றால், நிலைமை எந்­த­ள­வுக்கு பார­தூ­ர­மா­ன­தென்­பதை புரிந்து கொள்­வது கடி­ன­மல்ல.

இந்த இடத்தில் அவர், போரில் உயி­ரி­ழந்த புலி­களும் பொது­மக்கள் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டலாம் என்ற ஊகங்­களை எழுப்பி விட்­டி­ருக்­கிறார்.


ஆனந்­த­புரம் சமரில் புலி­களின் வட­போர்­முனைக் கட்­டளைத் தள­பதி பிரி­கே­டியர் தீபன் உயி­ரி­ழந்தார்.

அவ­ரது சட­லத்தை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றிய போது, சாதா­ரண உடை­யி­லேயே காணப்­பட்டார் என்றும் அவ­ரது கையில் ஆயுதம் இருந்­தது  என்றும் ஜெனரல் சவேந்­திர சில்வா குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அவர் சாதா­ரண உடையில் இருந்­ததால், அவ­ரையும் கூட யாரேனும் ஒரு பொது­மகன் எனக் கணக்கு காட்டக் கூடும் என அவர்  கூறி­யி­ருக்­கிறார்.

இது ஒரு திசை திருப்பும் கருத்­தாக தெரி­கி­றது.

தீபனின் உயி­ரி­ழப்பை புலிகள் மறுக்­கவோ, மறைக்­கவோ இல்லை.

அப்­ப­டி­யி­ருக்க, அவரை பொது­மகன் என அடை­யா­ளப்­ப­டுத்­தலாம் என்று ஊகங்­களை எழுப்­பு­வது தவறு.

இறு­திக்­கட்டப் போரின் போது, விடு­தலைப் புலி­களின் சீரு­டை­யுடன், இரா­ணு­வத்­தினர் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­திக்குள் ஊடு­ருவத் தொடங்­கி­யி­ருந்­தனர்.

வன்­னிக்குள் பல இடங்­களில் கிளைமோர் தாக்­குதல் நடத்­திய இரா­ணு­வத்தின் ஆழ ஊடு­ருவும் அணி­யினர் புலி­களின் சீரு­டை­யையே பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

அத்­து­ரு­கி­ரி­யவில் இரா­ணு­வத்தின் ஆழ ஊடு­ருவும் படை­ய­ணியின் மறை­விடம் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட போது, அங்கும் விடு­தலைப் புலி­களின் சீரு­டைகள் சிக்­கி­யி­ருந்­தன. இவ்­வா­றான நிலையில், பொது­மக்கள் மீது விடு­தலைப் புலிகள் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­பட்ட பல சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னால், இரா­ணு­வத்­தினர் இருந்­தனர் என்ற குற்­றச்­சாட்­டு­களும் இருந்­தன.

முள்­ளி­வாய்க்­காலில், குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் போர் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த போது, புலி­களின் சீரு­டையில் இரா­ணு­வத்­தினர் ஊடு­ருவத் தொடங்­கி­யதால், ஒரு கட்­டத்தில் புலி­களின் தலைமை சீருடை அணிய வேண்டாம் என  தமது உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் தக­வல்கள் உள்­ளன.

ஜெனரல் சவேந்­திர சில்வா பொது­மக்கள் உயி­ரி­ழப்­புக்குப் பொறுப்­புக்­கூறத் தயா­ரில்லை என்­ப­தையே அவ­ரது கருத்­து­களில் இருந்து உணர முடி­கி­றது.

தம் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­களை மறுக்கும் அவர், தான் ஒரு போர்க்­குற்­ற­வாளி அல்ல, நாட்­டுக்­கா­கவே போரிட்டேன் என்று கூறி­யி­ருக்­கிறார்.

நாட்­டுக்­காக அவர் போரிட்டார் என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை.

ஆனால், நாட்­டுக்­காக போரிடும் வழி­மு­றைகள் இருக்­கின்­றன. சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டங்கள், மனித உரிமைச் சட்­டங்­களை மீறாத வகையில், சர்­வ­தேச போர்ச் சட்­டங்­க­ளுக்கு இணங்க நாட்­டுக்­காக போரி­டு­ப­வர்­களை யாரும் கேள்வி எழுப்­பு­வ­தில்லை.

இந்தச் சட்­டங்கள் மீறப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் தான், அவர் மீது போர்க்­குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

அதுவே, அவர் மீதான சர்­வ­தேச பயணத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தற்கும் கார­ண­மா­கி­யி­ருக்­கி­றது.

போர்க்­குற்­றச்­சாட்­டு­களை மறுப்­பதோ,  நான் போர்க்­குற்­ற­வாளி அல்ல எனக் கூறு­வதோ இந்தப் பிரச்­சி­னை­களில் இருந்து வெளி­யே­று­வ­தற்­கான வழி அல்ல.

போர்க்­குற்ற விசா­ரணை ஒன்­றுக்கு முகம் கொடுப்­பது தான் இதற்கு சரி­யான வழி.

ஆனால், ஜெனரல் சவேந்­திர சில்­வாவோ, இலங்கை அர­சாங்­கமோ எந்­த­வொரு போர்க்­குற்ற விசா­ர­ணை­கை­ளுக்கும் இணங்­க­வில்லை.

உள்­நாட்டில் அத்­த­கைய விசா­ர­ணை­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

சர்­வ­தேச அளவில் அத்­த­கைய விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கும் இணங்­க­வில்லை.

ஜெனரல் சவேந்­திர சில்வா தன்னை ஒரு போர்க்­குற்­ற­வாளி அல்ல என்று சர்­வ­தேச  அளவில் நிரூ­பிக்கக் கூடிய வாய்ப்பு 2012ஆம் ஆண்­டி­லேயே கிடைத்­தது.

அதனை அவர் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

போரின் இறுதிக் கட்­டங்­களில் 58ஆவது டிவி­சனின் தள­ப­தி­யான சவேந்­திர சில்வா,  சட்­டத்­திற்குப் புறம்­பான கொலை மற்றும் சித்­தி­ர­வதை போன்ற சட்­ட­வி­ரோதச் செயல்­களைச் செய்­த­தாக நியூ­யோர்க்கின் தெற்கு  மாவட்ட நீதி­மன்­றத்தில்,  விடு­தலைப் புலிகள் தள­பதி ரமேஷின் மனைவி உள்­ளிட்ட மனு­தா­ரர்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

அமெ­ரிக்கக் குடி­மகன் அல்­லாத ஒருவர், அமெ­ரிக்­கா­விற்கு வெளியே நடந்த ஒரு செய­லுக்­காக அவ­ருக்கு எதி­ராக உரி­மை­யியல் வழக்குத் தொடர 'அயல்­நாட்டு சித்­தி­ர­வதைக் கோரிக்கைச் சட்டம் ' அனு­ம­திக்­கி­றது.

அந்தச் சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,  தானோ அரச படை­யி­னரோ போர்க்­குற்­றங்­களில் ஈடு­ப­ட­வில்லை என சவேந்­திர சில்வா வாதிட்டு வழக்கை வெல்ல முயற்­சித்­தி­ருக்­க­வில்லை.

மாறாக,  அப்­போது ஐ.நா.வுக்­கான துணைத் தூதுவர் என்ற இரா­ஜ­தந்­திரப் பத­வியில் இருப்­பதை காரணம் காட்டி, இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரி­மையைக் கோரி அவர் அந்த வழக்கில் இருந்து தப்­பினார்.

அந்த வழக்கு அப்­போது அமெ­ரிக்க நீதி­மன்­றினால் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

அப்­போது அவர், அந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால்- தான் போர்க்­குற்­ற­வாளி அல்ல என்று நிரூ­பித்­தி­ருந்தால், அமெ­ரிக்­காவோ, பிரித்­தா­னி­யாவோ அவ­ருக்கு எதி­ராக தடை­களை விதிக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­காது.

2011ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்த ஒரே விடயம், இலங்கை அர­சாங்கம் சுயா­தீ­ன­மான, பக்­கச்­சார்­பற்ற பொறுப்­புக்­கூறல் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பது தான்.

அந்தக் கோரிக்­கை­களை இலங்­கையில் ஆட்­சியில் இருந்த அர­சாங்­கங்கள் எதுவும் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

அந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஐ.நா.வுக்­கான பிரதித் தூது­வ­ராக, இரா­ணுவத் தள­ப­தி­யாக, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக பத­வியில் இருந்த ஜெனரல் சவேந்­திர சில்வா மற்றும் ஏனைய படை அதி­கா­ரி­களும்  அர­சாங்­கங்­க­ளுக்கு வலி­யு­றுத்­த­வில்லை.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் அத்­த­னையும் பொய் என்றால், இலங்கை அர­சாங்கம் ஏன், பக்­கச்­சார்­பற்ற, நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான போர்க்­குற்ற விசா­ர­ணை­களை இன்று வரை தானும் நடத்­தாமல் இருக்­கி­றது, சர்­வ­தேச சமூ­கத்­தையும் நடத்த விடாமல் தடுக்­கி­றது?

முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­க­ளான சரத் பொன்­சேகா, சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணையை எதிர்­கொள்ளத் தயார் என்று கூறி­யி­ருந்தார்.

இப்­போது, ஜெனரல் சவேந்­திர சில்வா, எந்த போர்க்­குற்­றச்­சாட்­டுக்கும் பதி­ல­ளிக்க தயார் என்­கிறார்.

அப்­ப­டி­யானால், போர்க்­குற்ற விசா­ர­ணை­களை உள்­நாட்டில் நடத்­தவோ வெளித்­த­ரப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவோ தடை­யாக இருக்கும் தரப்பு எது?

அர­சாங்கம் தான் அதனைத் தடுக்­கி­றது என்றே எடுத்துக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

போர்க்­கா­லத்தில் இருந்த மஹிந்த அர­சாங்கம், பின்னர் வந்த கோட்டா அர­சாங்கம் என்­பன  போருக்­கான அர­சியல் தலை­மைத்­துவம் வழங்­கி­யதால், அச்­சப்­பட்டு ஒதுங்­கி­யி­ருக்­கலாம்.

மைத்திரி அரசாங்கம், ரணில் அரசாங்கம் என்பன ஏன் அதற்குத் துணியவில்லை?

இப்போதைய அநுர அரசாங்கமும் கூட, அத்தகைய விசாரணைகளுக்குத் தயாராக இல்லை.

எந்தவொரு அரசாங்கமும் உள்நாட்டு விசாரணை களை நடத்தப் போவதும் இல்லை, சர்வதேச விசாரணையை அனுமதிக்கப் போவதும் இல்லை என்பதை தெரிந்து தான், ஜெனரல் சவேந்திர சில்வாவும் சரத் பொன்சேகாவும், போர்க்குற்றச்சாட்டுகளை மறுப்பதுடன், எந்த விசாரணைக்கும் தயார் என்கிறார்கள்.

எந்தவொரு அரசாங்கமும் படையினரை பொறுப்புக்கூற வைக்கப் போவதில்லை என்பதையும், படையினரைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை என்பதையும் உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வரும் கொள்கை ரீதியான முடிவு எடுக்காத வரை, ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்களை, போர்க்குற்றச்சாட்டுகள் துரத்திக் கொண்டு தான் இருக்கும்.

தண்டனையில் இருந்து தப்பித்தாலும் இதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

சத்­ரியன்

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்